வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலின் தேதியை அறிவித்ததை தொடர்ந்து, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால், கூட்டணியை பலப்படுத்த அதிமுக, திமுக போன்ற முன்னணி கட்சிகள் அதற்கான வேளையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது.
அதன்படி, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமாவிற்கு 23 தொகுதிகளை ஒதிக்கீடு செய்வதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் தேமுதிக தலைவர் விஜகாந்த்தை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தாக கூறப்படுகிறது. விரைவில் தொகுத்து பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்தபடியாக தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் பாஜகவுக்கு ஒதுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.
இன்று புதுச்சேரி, தமிழகத்தில் அமித்ஷா பொது கூட்டம் மற்றும் பேரணியில் கலந்து கொள்ளவுள்ளார். இதனிடையே, நேற்று காலை முதல்வர், துணை முதல்வரை சந்தித்த குழு, இன்று அமித்ஷாவுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளது. சென்னையில் அமித்ஷாவுடன் முருகன், கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…