இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணங்களுக்குப் பின் இந்தக் கொலைவாளினை கீழே போடுவீர்கள்? – சு.வெங்கடேசன்

இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணங்களுக்குப் பின் இந்தக் கொலைவாளினை கீழே போடுவீர்கள்?
இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நீட் தேர்வு எழுதவிருந்த தனுஷ் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அந்த வடுவே இன்னும் மறையாத நிலையில், இன்று காலை நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி தோல்வி பயத்தால், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து எம்.பி.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்குத் தள்ளுகிறது நீட் என்னும் கொலைவாள். இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணங்களுக்குப் பின் இந்தக் கொலைவாளினை கீழே போடுவீர்கள்?’ என்று பதிவிட்டு, நாடாளுமன்றத்தில் அவர் பேசிய வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்குத் தள்ளுகிறது நீட் என்னும் கொலைவாள்.இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணங்களுக்குப் பின் இந்தக் கொலைவாளினை கீழே போடுவீர்கள்?
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் நான் பேசியது#BANNEET #NEET #MBBS pic.twitter.com/W7uyOp0v0t
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 14, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!
June 20, 2025