#TNBudget2021: தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு.

தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று  நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பல திட்டங்கள் குறித்த தகவல்கள் பட்ஜெட் உரையில் இடம்பிடித்திருந்தது.

அதன்படி, தமிழ்நாடு பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு: 

  • தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு.
  • சீர்முக்கு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு.
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4807 கோடி ஒதுக்கீடு.
  • மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு 959.20 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உறுதி செய்ய ரூ.20 ஆயிரம் கோடி.
  • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
  • மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலன் மேம்பாட்டுக்கு ரூ.1149.79 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த மொத்தம் ரூ.6607.17 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடியும் ஒதுக்கீடு.
  • முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு 959.20 கோடி ஒதுக்கீடு.
  • புரட்சி தலைவர் எம்ஜிஆர் மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ.1,725.41 கோடி ஒதுக்கீடு.
  • காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.1,360 கோடி ஒதுக்கீடு.
  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.13 கோடி ஒதுக்கீடு.
  • விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
  • கொரோனா நிவாரண தொகுப்பு ரூ.9,370.11 கோடி ஒதுக்கீடு.
  • கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
  • உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 25 கலை கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு 10 கோடி ஒதுக்கீடு.
  • பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு.
  • சுற்றுலா துறைக்கு 187.59கோடி ஒதுக்கீடு. 300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.
  • ஜல் ஜீவன் இயக்கம் மூலம் கிராமப்புறங்களில் 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
  • நீதித்துறைக்கு ரூ.1,713 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மத்திய அரசின் தூய்மை பாரத இந்தியா திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.
  • நெடுஞ்சாலைகள் துறைக்கு ரூ.17,899.17 கோடி ஒதுக்கீடு.
  • 2021 – 22 ஆம் ஆண்டிற்குள் 200 குளங்களை தரம் உயர்த்த ரூ.111.24 கோடி ஒதுக்கீடு.
  • 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.1046.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • விவசாயத்திற்கான இலவச மின்சாரம், மானியம் மற்றும் மின் துறை இழப்புகளுக்காக ரூ.9,872.77 கோடி ஒதுக்கீடு.
  • வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்வு.
  • தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்க ரூ.433 கோடி ஒதுக்கீடு.
  • கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.
  • பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைப்பு.
  • ஒருங்கிணைந்த குழைந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.2,356 கோடி ஒதுக்கீடு.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கான ரூ.225.62 நிதி ஒதுக்கீடு.
  • கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் ஏழைகளுக்கான இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு.
  • திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ஓய்வூதிய திட்டத்திற்காக ரூ.1.50 கோடி ஒதுக்கீடு.
  • இந்த ஆண்டு 100 திருக்கோவில்களில், நந்தவனம் ஆகியவற்றை சீரமைக்க 100 கோடி ஒதுக்கீடு.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

17 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

21 hours ago