கொரோனாவால் உயிரிழந்த கணவர் – 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்!

Published by
Rebekal

கொரோனாவால் கணவர் உயிரிழந்ததால் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பதாக சென்னை பல்பொருள் அங்காடி மேலாளராக பணியாற்றிய பாஸ்கர் என்பவருடன் நித்தியா எனும் பெண்மணிக்கு திருமணமாகிய நிலையில், இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகனும், 6 வயதில் மக்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 2-ஆம் தேதி பாஸ்கருக்கு திடீரென பாதிப்பு ஏற்பட்டதால்,  அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பாஸ்கர் சிகிச்சைப் பலனின்றி கடந்த 9ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.

எனவே, கணவர் இறந்த மன அழுத்தத்திலிருந்து நித்யா தனது மகன் மற்றும் மகளுடன் ஈரோட்டில் உள்ள தனது தந்தையின் தங்கியிருந்துள்ளார். ஆனால் அவரின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாத நித்தியா நேற்று மதியம் உணவில் விஷ மாத்திரையை கலந்து மகள் மற்றும் மகனுக்கு கொடுத்து தானும் அதை சாப்பிட்டு வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றுள்ளார். காலை 6 மணிக்கு பெற்றோர்கள் கதவை திறந்து பார்த்த பொழுது மகள் நித்தியா மற்றும் பேத்தி பேரன் ஆகியோர் மயங்கிக் கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவர்கள் இருந்த அறையில் விஷ மாத்திரையை இருந்ததால் மூவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நித்தியா மற்றும் அவரது மகன் மகள் ஆகிய மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கணவன் இறந்த சோகம் தாங்க முடியாமல் இளம் வயதிலேயே பெண் தனது குழந்தைகளையும் கொன்று தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago