உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என நானும் விரும்புகிறேன் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி.
தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் தமிழக உழவர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொது மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதன்பின் பேசிய அவர், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என நானும் விரும்புகிறேன். அவரால் பல நல்ல திட்டங்கள் பொது மக்களுக்கு எளிதில் கிடைக்கும் என்றார்.
கடந்த ஆறு மாத காலமாக சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றி வருகிறார். உழைப்பவர்களுக்கு மரியாதை உண்டு. இந்த இளம் வயதில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து நல்ல முறையில் பணியாற்றி வருகிறார். எனவே, உதயநிதி அமைச்சரானால் மக்களுக்கு லாபம்தான் என தெரிவித்தார்.
இதுபோன்று உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கூடுதலாக அந்த பொறுப்பும் வழங்கினாலும் சரி, அமைச்சர் பதவி வழங்கினாலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என தெரிவித்திருந்தார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் வெற்றிக்காக அரும்பாடுபட்ட உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் சிறப்பாகச் செயல்படுபவர். அவர் அமைச்சராக வருவதில் எங்களுக்கு ஆச்சர்யம் இல்லை.அதனை வரவேற்போம் அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் அனைவரும் பாராட்டும் அளவிற்கு செயல்பட்டு வருகிறார். வெகுவிரைவில் உதய நிதி அமைச்சராக வர வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அமைச்சராக அவரது பணி தொடர வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் தெரிவித்திருந்தார். இந்த வரிசையில் தற்போது அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வமும் இடம்பெற்றுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…