தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம் .எல். ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். தேர்தலில் கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்க கோரி மனு கொடுத்திருந்தார்.
அந்த மனுவில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தர் , ரவிக்குமார்மற்றும் ஈரோடு கணேசமூர்த்தி ஆகிய எம்.பி-களின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கும் , திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற நான்கு எம்.பி களுக்கும் பதிலளிக்கும்படி உத்தரவு பிறப்பித்து இருந்தது.
அதன்படி ஈரோடு எம்பி கணேசமூர்த்தி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் நான் மதிமுக உறுப்பினர் பதவியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த பிறகுதான் ஈரோடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக கூறினார்.
மேலும் நான் தற்போது திமுக உறுப்பினராக தான் உள்ளேன். மக்களவையில் திமுக உறுப்பினராகவே சபாநாயகர் அங்கீகரிப்பதாக, திமுக கொறடா தான் தனக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதாகவும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…
டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…