ரூ.610 கோடிக்கு நான் வொர்த் இல்லை, 2 ஆடு, மாடுகள் தான் இருக்கு – அண்ணாமலை

Published by
பாலா கலியமூர்த்தி

நான் பேசிய அனைத்து விவரங்களுக்கும் ஆதாரம் உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.

சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அனுப்பியுள்ள நோட்டீசை சட்டப்படி சந்திப்பேன். நான் பேசிய அனைத்து விவரங்களுக்கும் ஆதாரம் உள்ளது. திமுக அவதூறு வழக்கு போடும் அளவிற்கு நான் தகுதி இல்லாத சாதாரண விவசாயி தான். 610 கோடி ரூபாய்க்கு நான் வொர்த் இல்லை, என்கிட்ட 2 டப்பா, ஊரில் 2 ஆடு, மாடுகள் தான் இருக்கிறது.

என்னை சாதாரண மனிதாக மதித்து, 500 கோடி முதலில், 100 கோடி 2வது மற்றும் தற்போது 10 கோடி நஷ்டஈடு கேட்டு திமுக எம்பி வில்சன் புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என அண்ணாமலை கூறினார். எனவே, எல்லாத்தையும் அனுப்புங்கள், மொத்தமாக பார்த்துவிடலாம். ஒருவாரம் டைம் எடுத்து மொத்தமாக அனுப்பி வையுங்கள் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அமைச்சர்களை நான் மிரட்டி பணம் வாங்கியுள்ளேன் என பத்திரிகையாளர் சந்திப்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி குற்றசாட்டி உள்ளனர். நான் இன்னும் 6 மணி நேரம் பாஜக தலைமை அலுவலகத்தில் இருப்பேன், தெம்பு, திராணி இருந்தால், உண்மையான ஆதாரம் இருக்கு என்றால் முழு போலீஸ் படையை பயன்படுத்தி என்னை கைது செய்து உள்ளே அனுப்ப வேண்டும்.

அப்படி கைது செய்யவில்லை என்றால், திமுக சொல்வதை இனிமேல் தமிழக மக்கள் பொருட்டாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்றார். என்னை கைது செய்யவில்லை என்றால் என் மீதான குற்றசாட்டு பொய்யாகும் என தெரிவித்த அண்ணாமலை, முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து பல கேள்விகள் உள்ளன. அதற்கு பதிலளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…

7 hours ago

அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு மோசமாக விளையாடிய 7 வீரர்கள்…கழட்டிவிட திட்டம் போட்ட அணி நிர்வாகங்கள்?

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…

8 hours ago

இன்று இந்த 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…

9 hours ago

மாநிலங்களவை சீட்? அதிமுகவின் முடிவிற்காக காத்திருக்கும் தேமுதிக..!

சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…

9 hours ago

நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுவது குற்றமா? த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து…

9 hours ago

எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை – முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு…

11 hours ago