யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஒரே இந்திய பிரதமர் நான் – பிரதமர் மோடி

Published by
பாலா கலியமூர்த்தி

இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் மோடி, இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஒரே இந்திய பிரதமர் நான் எனவும் குறிப்பிட்டார்.

வளர்ச்சி பணிகள் மூலம் ஈழத் தமிழர் நலன்களை உறுதி செய்து வருகிறோம். யாழ். – மன்னார் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது என்றும் சென்னை- யாழ்ப்பாணம் இடையே விமான சேவை இயக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார். யாழ் கலாசார மையம் விரைவில் திறக்கப்படும். ஈழத் தமிழர்கள் சமத்துவம், சம உரிமையுடன் வாழ்வதை உறுதி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு இதுவரை 50,000 வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். மலையகத் தமிழர்களுக்கு 4,000 வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். எங்கள் ஆட்சியில் 1600க்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் ஒரு மீனவர் கூட இல்லை-313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன என பிரதமர் பேசியுள்ளார்.

மீனவர்கள் பிரச்சனை நீண்ட காலமாக இருக்கிறது. மீனவர் பிரச்சனையின் வரலாற்றுக்குள் செல்லவில்லை. இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் விடுதலை செய்வதை உறுதி செய்திருக்கிறோம். மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் என உறுதிபட பிரதமர் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

4 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

5 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

5 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

6 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

7 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

8 hours ago