“மாணவச் செல்வங்களே,கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்” – முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ..!

Published by
Edison

நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த 12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதில் தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினார்கள். இந்நிலையில், நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பதாகவே, தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதனை தொடர்ந்து, நீட் தேர்வு எழுதி முடித்த பின் தோல்வி பயத்தால், நேற்று கனிமொழி என்ற மாணவியும், இன்று சௌந்தர்யா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்கள் தைரியமாக இருக்குமாறும், விபரீதமான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் அரசியல் பிரபலங்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

இந்நிலையில்,மாணவச் செல்வங்களே! மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம்!NEET எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியதாவது:

“கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனித்தா இறந்தபோது என்ன மனநிலையில் இருந்தேனோ? அதே மனநிலையில் தான் தற்போதும் இருக்கிறேன்.

சனிக்கிழமை சேலத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டபோது,இனி இப்படி ஒரு துயரம் நடக்க கூடாதென்று மாணவச் செல்வங்களை கேட்டுக் கொண்டேன்.

எனினும்,நேற்று அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கனிமொழி என்ற மாணவியும், இன்று வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இந்த செய்தியை கேள்விப்பட்டதும் நான் சுக்கு நூறாக உடைந்து போயிட்டேன்.இப்போது எனக்கு இருக்க வேதனையை விட இனி இப்படி ஒரு துயரம் நடக்க கூடாது என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது.அந்த அக்கறையோடுதான் உங்களிடம் பேசுகிறேன்.பல தலைமுறையாக மறுக்கப்பட்டு வந்த கலவிக்கதவு இப்போதுதான் கொஞ்சம் திறந்து உள்ளது.அதையும் இழுத்து மூடும் செயலாகத்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.

படிக்க தகுதி தேவை இல்லை.படித்தால் தன்னாலேயே தகுதி வந்துவிடும்.பல குளறுபடிகளைக் கொண்ட நீட் தேர்வு,ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கனவை நாசமாக்குகிறது என்று திமுக கழகம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.அதற்கு முன்னாடி,திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதும்கூட நீட் தேர்வை நடத்த விடவில்லை.அனாலும்,சிலர் தங்களுடைய சுயலாபத்திற்காக,இந்த தேர்வை தமிழகத்துக்குள் அனுமதித்தார்கள்.சிலர் இப்போதும் இந்த அநீதி தொடர வேண்டும் என்று பல பொய்யான பரப்புரைகளை செய்கிறார்கள்”,என்று கூறியுள்ளார்.

மேலும்,அவர் கூறுகையில்:”பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறி அழுத்தங்கள் தர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.ஆசிரியர்கள்,திரைத்துறையினர் உள்ளிட்டோர் மாணவச் செல்வங்களுக்கு தன்னம்பிக்கை விதையை விதைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.தயவு செய்து,மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

3 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

4 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

4 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

5 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

5 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

6 hours ago