kushpoo [Imagesource : Representative]
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், இதற்கு கண்டனங்கள் வலுத்து வந்தது. இந்த நிலையில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளை நேரில் ஆஜராகுமாரும் மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சச்சையான பேச்சு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகை குஷ்பு ஒருவருக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் திமுக தொண்டர்கள் இப்படியான மோசமான மொழியை தான் பேசுவார்கள்.
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை குறித்து சர்ச்சை பேச்சு – காவல்துறை சம்மன்..!
சாரி என்னால் உங்களைப் போல ‘சேரி’ மொழியில் பேச முடியாது. திமுக உங்களுக்கு சட்டங்களை கற்றுத் தரவில்லை என்றால் தாங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது என பதிவிட்டு வந்தார். குஷ்புவின் இந்த பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், குஷ்பூ ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
இதுகுறித்து குஷ்பூ அளித்துள்ள விளக்கத்தில், ‘பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதை பொருள் எனவும் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். அன்பு என்று அர்த்தத்திலேயே சேரி என்பதை பயன்படுத்தினேன் என விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…