காங்கிரசை விட பாஜகவைத்தான் ஆயிரம் மடங்கு தாக்கி பேசியிருக்கிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தொடர்பான விவாதம் மாநிலங்கவையில் நடைபெற்றது.அப்பொழுது மதிமுக எம்.பி.வைகோ பேசுகையில்,காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் அறிக்கை வெளியிட்டார்.அந்த அறிக்கையில், அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி வைகோ என்று விமர்சித்தார்.
இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பதில் அளித்தார். அதில், ராஜபக்சே அரசு தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள் மீது நடத்திய இனப்படுகொலையின் போது இந்தியாவில் மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,என்னை யார் வசைப்பாடினாலும் பரவாயில்லை.மாநிலங்களவையில் காங்கிரசை விட பாஜகவைத்தான் ஆயிரம் மடங்கு தாக்கி பேசியிருக்கிறேன்.
பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று காஷ்மீர் மக்களுக்கு நேரு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.காஷ்மீர் பிரச்சினையில் வாஜிபாய் கனவை நிறைவேற்றிவிட்டதாக மோடி கூறுவது தவறு.காஷ்மீர் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் வேண்டும் என்று வாஜ்பாய் எங்களிடம் கூறியதில்லை என்றும் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…