மனம் மாறி நல்ல நிதி அமைச்சராக வருவார் என நம்பிக்கை உள்ளது- அண்ணாமலை..!

Published by
murugan

ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை கடும் முரண்பாடுகளை கொண்டுள்ளது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பண்டித தீனதயாள் உபாத்தியாயாவின் 106 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, முதல்வர் நிதி அமைச்சருக்கு அறிவுரை கூற வேண்டும்; நான் அறிவாளி இல்லை, நீங்களும் அறிவாளி இல்லை, ஆனால் கூட்டாக குழுவாக சேர்ந்தால் அறிவாளிதான்.

இந்த வருடம் 150 மாணவர்களோடு எய்ம்ஸ் திறக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தும், தமிழக அரசு திறக்க வேண்டாம் என முரண்டு பிடிக்கிறது ஏன்..?தன்னை பெரிய பொருளாதார அறிஞர் கூறிக்கொள்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர். மனம் மாறி நல்ல நிதி அமைச்சராக வருவார் என நம்பிக்கை உள்ளது. அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவே அரசு சிந்திக்க வேண்டும். தேவையில்லாத விசபரிட்சையை செய்ய வேண்டாம்.

திமுக தேனிலவு காலகட்டத்தில் உள்ளது. கடந்த 4 மாதத்தில் அவர்கள் செய்த தவறுகள் ஏராளம், இதை மக்களிடம் எடுத்து செல்வோம். திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை கடும் முரண்பாடுகளை கொண்டுள்ளது. கல்வி வியாபார சந்தையாக இருந்ததை நீட் உடைத்துள்ளது. இதை ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கை பேசவில்லை என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

2 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

2 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

4 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

4 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago