பெரியப்பாவாக சொல்கிறேன், ஒழுங்காக படி – ஸ்டாலினுக்கு எம்ஜிஆர் அறிவுரை.!

Published by
பாலா கலியமூர்த்தி

பெரியப்பாவாக சொல்கிறேன் அரசியலிலும் ஆர்வமாக இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் தனக்கு அறிவுரை வழங்கியதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், பூந்தமல்லி நசரத்பேட்டையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அப்போது எம்ஜிஆர் மற்றும் ஸ்டாலின் சிறு வயதில் இருக்கும் புகைப்படத்தை மக்களிடம் காண்பித்து, நானும் எம்ஜிஆரும் சேர்ந்து இருக்குற போட்டோ என்று கூறி, இந்த புகைப்படத்தின் பின்னணி என்ன என்று ஒரு பெண்மணி என்னிடம் கேட்டார்.

அப்போ நான் சொன்னேன், 1971-ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞர் தலைமையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்றது திமுக. அப்போது கலைஞர் கூறினார், நான்தான் ஒழுங்காக படிக்காமல் போயிட்டேன். நீனும் இதே வேலையாக இருக்க கூடாது. ஒழுங்கா படிக்கணும் என்று அறிவுரை கூறினார் கலைஞர்.

இதையடுத்து நிறைவு விழா நாடகம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கலைஞர் ஸ்டாலினிடம் அறிவுரை கூறியுள்ளேன் என்று மேடையில் தெரிவித்தார். அடுத்து எம்ஜிஆர் உரையாற்றியபோது, உங்க அப்பா இப்படி சொன்னார். ஆனால் நான் உங்க அப்பாவா இல்ல, பெரியப்பாவாக இருந்து சொல்கிறேன், ஒழுங்கா படித்து, அதே நேரத்தில் எந்த அளவுக்கு நீ அரசியலில் ஆர்வத்துடன் இருக்கியோ அதையும் நீ ஒழுங்கா கவனிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் எனக்கு அறிவுரை கூறினார் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இப்போ எம்ஜிஆரை பற்றி முதல்வர் பழனிசாமி பேசிக்கொண்டு இருக்கிறார். என்றைக்காவது முதல்வர் பழனிசாமி எம்ஜிஆர் முகத்தை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறாரா? எம்ஜிஆர் குறித்து எதாவது கேள்விப்பட்டிருக்கிறாரா? இன்னைக்கு ஒரு நாடகத்தை நடத்தி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தல் வருவதால் அவர்கள் பெயர்களை கூறிக்கொண்டு வருகிறார்கள் என்று விமர்சித்து பேசியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

54 minutes ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

1 hour ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

1 hour ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

2 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

3 hours ago