என்ன பார்த்து தான் கெட்டு போகிறார்களா ..எனக்கு நீதி வேண்டும்? டிடிஎஃப் வாசன் ஆதங்கம்!!

Published by
அகில் R

டிடிஎஃப் வாசன் : உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கார் ஓட்டியதால் கைதான டிடிஎஃப் வாசனை தற்போது மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் செல்வதை அவரது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அப்போது, மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்க்காக  அவர் மீது மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், இவர் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல், செல்போன் பேசியபடி செல்லுதல், கொலை முயற்சி போன்ற 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு டிடிஎப் வாசனை போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இவரை இன்று காவல் துறையினர் மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் பத்திரிக்கையாளர்களை பார்த்து,”என்னை பார்த்து தான் மக்கள் கெட்டுப்போகிறார்கள்? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது.

அதனால் கெட்டுப்போவதில்லையா? சட்டம் என்பது எல்லாருக்கும் சமம்தானே. எத்தனை பேர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றார்கள்?. குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுகிறார்கள் என்ற வழக்கு?.. ஏன்.. எனக்கு மட்டும் கொலை வழக்கு? எனக்கு நீதி வேண்டும்..” என கேள்வி எழுப்பி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

2 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

3 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

4 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

4 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

5 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

5 hours ago