கள்ளக்குறிச்சி விவகாரம்: ‘அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்’..! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Published by
அகில் R

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலையை தற்போது  ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் காலனியை சேர்ந்த பலருக்கும் நேற்று இரவு முதல் வாந்தி, மயக்கம், வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. இந்நிலையில், அவர்களை அப்போது கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, இன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து கொண்டே இருந்தனர். இதனால், கள்ளச்சாராயம் குடித்து தான் உயிரிழந்தார்கள் என தவறான தகவலை பரப்புகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் கூறி இருந்தார்.

அதன் பின் உயிரிழப்பும் அதிகரிக்க தொடங்கியது, இதனால் சற்று முன்பு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக மாற்றப்பட்டதுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.

மேலும், தற்போது கள்ளச்சாராயம் அருந்தி 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேற்கொண்டு 40-பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து ‘இந்த வழக்கு விசாரணையையும் சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பாக தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் அவரது க்ஸ் தளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார். அவர், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்” என பதிவிட்டிருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

7 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

8 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

9 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

10 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

11 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

12 hours ago