பிரதமர் மோடி அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் – ராகுல்காந்தி

Published by
பாலா கலியமூர்த்தி

தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி தமிழ் என்பது மொழி, கலாச்சாரம், வரலாறு கொண்டது என கூறியுள்ளார்.

திருப்பூர் தாராபுரத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ் என்பது மொழி, கலாச்சாரம், வரலாறு கொண்டது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என பாஜக சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அது நாட்டின் அடித்தளம் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.

வேற்றுமையில் ஒற்றுமை, கலாச்சாரங்கள் மீதான மரியாதை நாட்டின் அடித்தளம். தமிழ் கலாச்சாரத்தை பிரதமர் மோடி அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். பாஜக மாற்று ஆர்எஸ்எஸ் ஒரே மொழி, ஒரே மதம் ஒரே நாடு என்று கூறிக்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழைகளின் முதுகெலும்பை உடைத்தார் பிரதமர் மோடி. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான தொழில்கள் அழிந்தே போயின.

பிரதமர் மோடி நெருக்கமான 5 தொழிலதிபர்களுக்காகவே ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தினார். மேற்கு வங்கத்தில் பேசுவது தனி மொழி இல்லையா? மே.வங்கத்துக்கு வரலாறு இல்லையா? என்றும் பஞ்சாபி மொழியை மக்கள் பேசவில்லையா? வடகிழக்கில் தனிமொழிகள் இல்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழகத்து இளைஞர்கள் மட்டுமே முடிவு செய்வார்கள். தமிழ் மக்களுடன் எனக்கு இருப்பது குடும்ப உறவு, ரத்த உறவாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

21 minutes ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

2 hours ago

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…

2 hours ago

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

3 hours ago

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

5 hours ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

6 hours ago