ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா, கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா என பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டவர்கள் குறித்து நடிகர் கமல் பேசியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக செல்வம் எனும் மீன் விற்கும் தாய் பேருந்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நேற்று அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் குறவர் குடும்பத்தை சேர்ந்த மூவர் பேருந்திலிருந்து, உடமைகளை தூக்கி எறிந்து வெளியே அனுப்பப்பட்டனர்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பேருந்திலிருந்து மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்ட சம்பவத்தால் தமிழகம் கொதித்து கிடக்கும் நிலையில் ,நேற்று குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு உடமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளது.
ஏழைகள் என்றல் எள்ளுக்கீரையை? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். இதுபோன்ற அவமதிப்புகள் இனி நிகழாமல் இருப்பதை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…