Community Certificat : ரூ.5000 கொடுத்தால் MBC சாதி சான்றிதழ் கிடைக்கும்.! டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்.!

Published by
மணிகண்டன்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் குற்றசாட்டை முன்வைத்து உள்ளார். அதில், லஞ்ச பணம் கொடுத்தால் போலியாக ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)’ சான்றிதழ் கிடைக்கிறது என பதிவிட்டுள்ளார்.

அவர் தனது X சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) சாதிச்சான்றிதழ் வேண்டுமென்றால் 5000 ரூபாய் இருந்தால் போதுமானது. தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள ஏதேனும் சாதிகளின் பெயர்களில் போலியான சாதிச் சான்றிதழ்களைப் பெறுவது இப்போது அதிகரித்து விட்டது.

அதற்காகவே தமிழகத்தில் உள்ள தரகர்களிடம் 5000 ரூபாய் கொடுத்தால் போதும். உடனடியாக நீங்கள் கேட்கும் பெயரில் சாதிச் சான்றிதழ் கிடைத்து விடும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் [பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு அளிக்க வேண்டும் என அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. மேலும் இது தொடர்பான வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் தொடர் கோரிக்கை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

13 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago