கட்டி வா என்றால் வெட்டி வருபவர்கள் திமுக தொண்டர்கள் – மு.க.ஸ்டாலின் உரை.!

Published by
பாலா கலியமூர்த்தி

கலைஞர் அரங்கத்தில் திமுக முப்பெரும் விழாவில் கட்டி வா என்றால் வெட்டி வருபவர்கள் திமுக தொண்டர்கள் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை கலைஞர் அரங்கத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இவ்விலையில் கழக தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது, ‘எல்லோரும் நம்முடன்’ என்ற திமுக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, திமுகவில் இணைய விரும்புபவர்கள் https://www.dmk.in/joindmk/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து உறுப்பினர் அட்டையை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, திமுகவில் உழைத்தவர்களுக்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டது. இதில், முனைவர் அ.ராமசாமிக்கு அண்ணா விருதும், தஞ்சை எஸ்.என் உபயத்துல்லாவுக்கு கலைஞர் விருதும் வழங்கினார் முக ஸ்டாலின். பின்னர் பேசிய ஸ்டாலின், கட்டி வா என்றால் வெட்டி வருபவர்கள் திமுக தொண்டர்கள் என்று தெரிவித்தார். கொரோனா வைரசால் ஒரு உயிர் கூட போகாது என்ற சொன்னவர் முதல்வர். ஆனால், 8,000 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சம் என்பதுதான் அதை தடுக்கும் லட்சணமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்ட கொரோனா புள்ளி விவரங்களிலாவது உண்மையா? அதிலும் பொய்கள். கொரோனாவை விட கொடிய ஊழலரசு கோட்டையில் இருக்கிறது. முதல்வர் என்ன சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் உங்கள் பாட்சா பலிக்காது. நீட் தேர்வை எதிர்க்க முடியவில்லை, இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் தெளிவு இருக்கிறதா? மாநிலத்துக்கு வந்து சேரக் கூடிய நிதியை பெற முடியுமா? சி.ஏ.ஏ.வை எதிர்த்தீர்களா? என பல குற்றசாட்டுகளை முன் வைத்தார். தமிழக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர். இதுதான் முப்பெருவிழா சபதம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் 13 மாணவர்கள் தற்கொலைக்கு முதல்வர் பழனிசாமி தான் காரணம் என்று பதிலடி கொடுத்துள்ளார். 7 மாதங்களில் திமுக ஆட்சி என நாடே சொல்கிறது. மேலும், திமுகவில் உழைத்தவர்களுக்கு முக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், முனைவர் அ.ராமசாமிக்கு அண்ணா விருதும், தஞ்சை எஸ்.என் உபயத்துல்லாவுக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

31 minutes ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

57 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago