கோவை தொகுதி : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40க்கு 40 என்ற சாதனையை திமுக படைத்துள்ளது. அதில், கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காவிட்டாலும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழகத்தில் இருந்து NDA கூட்டணி சார்பில், எம்.பி.க்களை அனுப்புவோம் என எதிர்பார்த்தோம், அது நடக்கவில்லை என்பது வருத்தம்.
ஏதேனும் தவறு இருந்தால் ஆய்வு செய்து ஒரு வாரத்தில் விவாதிப்போம். மாநிலத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வர எம்.பி.க்களை ஆதரிப்போம். இந்தத் தேர்தலை ஒரு பாடமாகப் பார்க்கிறோம், முன்பை விட சிறப்பாகச் செயல்பட்டு மாநிலத்தில் வரும் தேர்தலில் எங்கள் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம்.
நான் பெற்ற வாக்குகள் அனைத்தும் பணம் கொடுக்காமல் பெற்ற வாக்குகள். தமிழ்நாட்டில் 2026ல் பாஜக ஆட்சியை பிடிக்கும். 3 முனை போட்டியில் இருந்து 2 முனை போட்டியாக மாறினால் தான், பாஜகவின் வெற்றி வாய்ப்பு சாத்தியம் என்று கூறிஉள்ளார்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…