கோவை தொகுதி : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது, தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40க்கு 40 என்ற சாதனையை திமுக படைத்துள்ளது. அதில், கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காவிட்டாலும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழகத்தில் இருந்து NDA கூட்டணி சார்பில், எம்.பி.க்களை அனுப்புவோம் என எதிர்பார்த்தோம், அது நடக்கவில்லை என்பது வருத்தம்.
ஏதேனும் தவறு இருந்தால் ஆய்வு செய்து ஒரு வாரத்தில் விவாதிப்போம். மாநிலத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வர எம்.பி.க்களை ஆதரிப்போம். இந்தத் தேர்தலை ஒரு பாடமாகப் பார்க்கிறோம், முன்பை விட சிறப்பாகச் செயல்பட்டு மாநிலத்தில் வரும் தேர்தலில் எங்கள் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம்.
நான் பெற்ற வாக்குகள் அனைத்தும் பணம் கொடுக்காமல் பெற்ற வாக்குகள். தமிழ்நாட்டில் 2026ல் பாஜக ஆட்சியை பிடிக்கும். 3 முனை போட்டியில் இருந்து 2 முனை போட்டியாக மாறினால் தான், பாஜகவின் வெற்றி வாய்ப்பு சாத்தியம் என்று கூறிஉள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…