செல்லப் பிராணிகள் வளர்க்க லைசென்ஸ்! 3 நாட்களில் இவ்வளவு விண்ணப்பமா?

Published by
பால முருகன்

சென்னை : சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெற 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராட்வெய்லர் இனத்தை சேர்ந்த இரண்டு நாய்கள் 5 வயது சிறுமியை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதைப்போலவே, மற்ற மாவட்டங்களிலும் சென்னையில் உள்ள மற்ற பகுதிகளிலும் தெருவில் இருக்கும் நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மனிதர்களை கடித்த சம்பவமும் தொடர்ச்சியாக நடைபெற்றது.

இதனையடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்ற காரணத்தால் சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தும் இருந்தது. அதில் குறிப்பாக  சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் எல்லாம் ஆண்டுதோறும் கண்டிப்பாக அதற்கான உரிமம் பெற வேண்டும் எனவும், உரிமம் பெற தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இணையதள வாயிலாகவும் ரூ50 செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ளலாம்,  என்று அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெற கடந்த 3 நாட்களில்   2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். செல்லப்பிராணிகளை வளர்க்க உரிமம் பெற  http://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, இந்த அறிவிப்பு கட்டாயமாக்கப்பட்டு வெளியான நாளில் இருந்து விண்ணப்பம் அதிகரித்து கொண்டு செல்கிறது.

அதன்படி, கடந்த 10 மாதத்தில் ஆன்லைன் மூலம் வெறும் 272 பேர் மட்டுமே உரிமம் பெற்ற நிலையில், இது கட்டாயமாக்கப்பட இந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில், இதுவரை 930 பேருக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

6 seconds ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

45 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

1 hour ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

1 hour ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

3 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

4 hours ago