செல்லப் பிராணிகள் வளர்க்க லைசென்ஸ்! 3 நாட்களில் இவ்வளவு விண்ணப்பமா?

Published by
பால முருகன்

சென்னை : சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெற 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராட்வெய்லர் இனத்தை சேர்ந்த இரண்டு நாய்கள் 5 வயது சிறுமியை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதைப்போலவே, மற்ற மாவட்டங்களிலும் சென்னையில் உள்ள மற்ற பகுதிகளிலும் தெருவில் இருக்கும் நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் மனிதர்களை கடித்த சம்பவமும் தொடர்ச்சியாக நடைபெற்றது.

இதனையடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டும் என்ற காரணத்தால் சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தும் இருந்தது. அதில் குறிப்பாக  சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் எல்லாம் ஆண்டுதோறும் கண்டிப்பாக அதற்கான உரிமம் பெற வேண்டும் எனவும், உரிமம் பெற தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இணையதள வாயிலாகவும் ரூ50 செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ளலாம்,  என்று அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் செல்லப் பிராணிகள் வளர்க்க உரிமம் பெற கடந்த 3 நாட்களில்   2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். செல்லப்பிராணிகளை வளர்க்க உரிமம் பெற  http://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, இந்த அறிவிப்பு கட்டாயமாக்கப்பட்டு வெளியான நாளில் இருந்து விண்ணப்பம் அதிகரித்து கொண்டு செல்கிறது.

அதன்படி, கடந்த 10 மாதத்தில் ஆன்லைன் மூலம் வெறும் 272 பேர் மட்டுமே உரிமம் பெற்ற நிலையில், இது கட்டாயமாக்கப்பட இந்த 3 நாட்களில் 2,300 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதில், இதுவரை 930 பேருக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது எனவும் சென்னை மாநகராட்சி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

1 hour ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

2 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

3 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago