Pondicherry University [file image]
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகம் மட்டும்மின்றி புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாகூர், காலாப்பட்டு, தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்கிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று நடைபெறவிருந்த புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும், ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வு தேதி குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர் மழை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு.!
இதற்கிடையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும், மீனவர்கள் தங்களது படகு, உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க புதுச்சேரி மீன்வளம், மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…