[file image]
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை, சென்னை, கரூர் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
2021ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் பரப்புரையின்போதும் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில், இன்று மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை.!
இந்த சோதனையானது அமைச்சருக்கு தொடர்புடைய இடங்கள் மட்டுமின்றி, அவரது உறவினர்களின் வீடுகள், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த சோதனை நடக்கிறது. இந்த சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனையை அரசியலாக்க வேண்டாம் என பாஜகவின் கரு.நாகராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்கூறுகையில், என்ன வருவாய் வந்திருக்கிறது என்பதை வருமான வரித்துறை பல நாட்கள் ஆய்வு செய்த பிறகே சோதனை நடைபெற்று வருகிறது. இது வழக்கமான வருமான வரித்துறை சோதனை தான், இதனை அரசியலாக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…