Income Tax Department (File Photo)
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், குறிப்பாக அமலாக்கத்துறை சோதனையானது தீவிரமாக நடைபெற்று அமைச்சர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே வேளையில், வருமானது அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில், பல்வேறு நிறுவனங்கள், குவாரிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இதில், ஆவணங்கள், ரொக்க பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
கன்னியாகுமரி: நாளை நிவாரண நிதி வழங்கப்படும் – ஆட்சியர் அறிவிப்பு!
இதையடுத்து, வரி மோசடி தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி பல்வேறு நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுமான நிறுவனம் தொடர்பாக சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, சேலம், விருதுநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை அமைந்தகரையில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் கார்ப்ரேட் அலுவலகம், ஈரோடு கருப்பன் வீதியில் உள்ள சிஎம்கே கட்டுமான நிறுவனம், அலுவலகம், சிஎம்கே கட்டுமான நிறுவன அதிபர்கள் குழந்தைசாமி, அவரது மகன்கள் பாலசுப்பிரமணி, வெங்கடாச்சலம் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று, நாமக்கல்லில் அரசு ஒப்பந்ததாரர் சத்தியமூர்த்தி வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…