கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.
கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது என திமுக போட்டி வேட்பாளர் வனிதா தாக்கல் செய்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைமுக தேர்தலை நடத்தினால் ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தோல்வி அடைந்துவிடும் என நீதிபதி தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவைச் சேர்ந்த வனிதா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பேரூராட்சி தலைவர் வேட்பாளராக ராகினியை கட்சியால் அறிவிக்கப்பட்டார். அதனால், நான் போட்டி வேட்பாளராக போட்டியிட்டேன். மார்ச் 4-ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் ராகினி 7 வாக்குகள் பெற்றதால், நான் 8 வாக்குகள் பெற்றதால் பேரூராட்சி தலைவராக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பின்னர், ராகினியின் குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து தலைவர் தேர்வில் தவறுகள் இருப்பதாக கூறி எனக்கு வழங்கப்பட்ட சான்றிதழை தேர்தல் அலுவலர் திரும்ப பெற்றார்.மேலும், மீண்டும் தேர்தல் நடத்தபட்டு வாக்குகள் எண்ணப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில், நான் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழை வழங்க தேர்தல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…