பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பி.இ, பி.டெக் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வினியோகம் இன்று தொடங்கியது. அதன்படி, https://tneaonline.org என்ற இணையதளத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொறியியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக ஆன்லைன் விண்ணப்பத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்துள்ளீர்களா? என்று விவரம் கோரி உள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரை அடிப்படையில் 7.5% முதல் 10% வரை இட ஒதுக்கீடு அமலாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், செப்.4ம் தேதி இடஒதுக்கீடு அடிப்படையில் பி.இ தரவரிசை பட்டியல் வெளியாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
B.E / B.TECH படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கிய முதல் நாளில் 25,611 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த 25,611 பேரில் 10,084 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர் என்றும் மாணவர் சேர்க்கை குழு செயலர் கூறியுள்ளார். மேலும், 25,611 பேரில் 5,363 பேர் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…