தன்மானத்தை இழந்து அதிமுகவில் சேர விரும்பவில்லை-திமுகவில் இணைந்த பின்னர் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

Default Image

தன்மானத்தை இழந்து அதிமுகவில் சேர விரும்பவில்லை என்று திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில்  தங்க தமிழ்ச்செல்வன் இணைந்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு வந்துள்ளது. அதை ஏற்று நான் திமுகவில் இணைந்துள்ளேன்.மாற்றான் தோட்டத்து மல்லிக்கைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் கொள்கையை கடைப்பிடிப்பவர் மு.க.ஸ்டாலின்.அதிமுகவில் இருந்த பலரும் திமுக வந்த பின், அவர்களுக்கு திமுக நல்லதே செய்துள்ளது.கலைஞருக்குப்பிறகு ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறார்.ஸ்டாலின் தலைமையை ஏற்றுக்கொண்டு திமுகவில் இணைந்துள்ளேன்.பதவி கேட்டுப் பெறுவதல்ல, எனது உழைப்பை பார்த்து தலைமையே பதவி கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஜெ. மறைவுக்கு பிறகு அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது.தன்மானத்தை இழந்து அதிமுகவில் சேர விரும்பவில்லை.அதிமுகவை பாஜக இயக்குகிறது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்