கிணற்றில் இருந்தது மனித கழிவே அல்ல… தேனடை தான்.! ஆய்வில் தகவல்.!

Published by
மணிகண்டன்

சென்னை : விழுப்புரம், கே.ஆர்.பாளையம் கிராம கிணற்றில் இருந்தது மனித கழிவு அல்ல, தேனடை என்று அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே கே.ஆர்.பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் மூலம் அருகில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு கிராமத்தில் உள்ள சுமார் 100 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கும் இந்த கிணற்றின் அருகிலும், உள்ளே சில அடி ஆழத்தில் இருந்த சுவரிலும்  மனித மலம் இருந்தது போல ஊர்மக்கள் பார்த்து சந்தேகத்துள்ளனர். இதனை அடுத்து, கஞ்சனூர் பகுதி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.

இந்த தகவல் உடனடியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழநிக்கு தெரிவிக்கப்பட்டு, அவர் உத்தரவின்பெயரில், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், கூடுதல் ஆட்சியர் குழு தலைமையில் அதிகாரிகள் கிணற்றின் அருகே ஆய்வு செய்தனர். மனித மலம் போல தெரிந்த பகுதியை எடுத்து சோதனை செய்ததில் அது மனித மலம் அல்ல தேனடை என்பது உறுதிசெய்யப்பட்டு ஊர் மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஊர் மக்களின் சந்தேகம் விலகியது.

தற்போது திறந்தவெளி கிணற்றை சுற்றி இரும்பு வேலி அமைக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

5 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

6 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

7 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

9 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

9 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

10 hours ago