உள்ளாட்சி தேர்தல் வரும்போது சூழ்நிலையை கருதி கூட்டணி அமைக்கப்படும் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 16 தொகுதிகளில் தோல்வி அடைந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல். முருகன், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாஜக தயாராக இருப்பதாக கூறினார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேசிய தலைவர்கள் தான் எப்போதும் கொள்கை முடிவு எடுக்கும். உள்ளாட்சி தேர்தல் வரும்போது சூழ்நிலையை கருதி கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருப்போம், ஆனால் உள்ளாட்சித் தேர்தல் அப்படியல்ல என எல். முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் இணைந்து பாஜக எதிர்கொண்ட நிலையில் 4 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…