கருப்பாக இருப்பதால் கருப்பு திராவிடனா? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதுக்குன்னு அதுவும் திராவிடரா? என சீமான் கேள்வி.
நேற்று இளையராஜாவின் மகன் யுவன்சங்கர்ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருப்பு திராவிடன் பெருமைமிகு தமிழன் என்று பதிவிட்டு இருந்தது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், யுவன் அண்ணா கருப்பு சட்டை அணிந்து கருப்பு திராவிடர் என்று தெரிவித்துள்ளதாக கூறுகிறீர்கள். என்னைவிட கருப்பு தமிழன் கருப்பு திராவிடன் யாரும் இல்லை. அவரை விட நான் கருப்பு. அவர் கருப்பு என்றால் நான் அண்டங்காக்கா கருப்பு. இதுபோன்ற கேள்விகளுக்கு இன்றுடன் முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள் என்று தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் கருத்து குறித்து பதிலளித்த சீமான் அவர்கள், ‘யுவன் தம்பிக்கு நான் ஒன்னு சொல்லிக்கிறேன். முதலில் நீ தெளிவாக இரு. கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என்று சொல்லுகிறீர்கள். உனக்கு ரெண்டு அடையாளம் இல்லை. ஒன்னு திராவிடனாக இரு, இல்லையென்றால் தமிழனாக இரு. தம்பி குழம்பாமல் இருங்கள். யுவன் சின்ன பிள்ளை அவருக்கு தெரியவில்லை. அதனால் அதை விட்டுவிடுங்கள். கருப்பாக இருப்பதால் கருப்பு திராவிடனா? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதுக்குன்னு அதுவும் திராவிடரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…