வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.
மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மைதானத்தில், நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய முதல்வர், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதே நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டம் என்பதன் முதனமை நோக்கம் என்றார்.
விபத்துக்கு மிக முக்கியமான காரணம் வேகம் தான். சாலையில் வாகனத்தை ஓட்டும் போது வேகத்தை குறைத்து, உங்களது உழைப்பில் வேகத்தை செயல்படுத்துங்கள். இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும். சிலர் ஹெல்மெட் வாங்கி, பைக் முன்னாடி வச்சிட்டு போலீஸ பார்த்ததும் எடுத்து தலையில மாட்டுறாங்க, முடி முக்கியமா உயிர் முக்கியமா என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறிய வார்த்தைகளை எடுத்துரைத்தார்.
பிள்ளைகள் கேட்கிறார்கள் என்பதற்காக விலை உயர்ந்த பைக்குகளை வாங்கிக் கொடுத்து, பிள்ளைகள் இழந்த பெற்றோர்களையும் நாம் பார்க்கிறோம். எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கி தருவதில் கவமான இருக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.
மேலும், அனைவரும் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலமாக தனிமனிதனின் சமூக பண்பாடு, ஒழுக்கம் வெளிப்படுகிறது என குறிப்பிட்டார். எனவே இந்த திட்டத்திற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…