முடி முக்கியமா உயிர் முக்கியமா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published by
பாலா கலியமூர்த்தி

வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.

மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மைதானத்தில், நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய முதல்வர், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதே நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டம் என்பதன் முதனமை நோக்கம் என்றார்.

விபத்துக்கு மிக முக்கியமான காரணம் வேகம் தான். சாலையில் வாகனத்தை ஓட்டும் போது வேகத்தை குறைத்து, உங்களது உழைப்பில் வேகத்தை செயல்படுத்துங்கள். இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும். சிலர் ஹெல்மெட் வாங்கி, பைக் முன்னாடி வச்சிட்டு போலீஸ பார்த்ததும் எடுத்து தலையில மாட்டுறாங்க, முடி முக்கியமா உயிர் முக்கியமா என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறிய வார்த்தைகளை எடுத்துரைத்தார்.

பிள்ளைகள் கேட்கிறார்கள் என்பதற்காக விலை உயர்ந்த பைக்குகளை வாங்கிக் கொடுத்து, பிள்ளைகள் இழந்த பெற்றோர்களையும் நாம் பார்க்கிறோம். எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கி தருவதில் கவமான இருக்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

மேலும், அனைவரும் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் மூலமாக தனிமனிதனின் சமூக பண்பாடு, ஒழுக்கம் வெளிப்படுகிறது என குறிப்பிட்டார். எனவே இந்த திட்டத்திற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருநெல்வேலி..தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழை…அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

திருநெல்வேலி..தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழை…அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…

35 minutes ago

பாஜகவிடம் அடைக்கலம் புகுந்த தி.மு.க தலைமை…தவெக விஜய் கடும் தாக்கு!

சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…

54 minutes ago

6 சிக்னல் கொடுத்த கருண் நாயர்..நோ சொன்ன அம்பையர்! டென்ஷனான பிரித்தி ஜிந்தா!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…

1 hour ago

இந்துக்கள் என்னை தங்கள் உடன்பிறப்பாகவே கருதுகிறார்கள் -மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…

3 hours ago

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…

4 hours ago

தலைமை காஜி மறைவு…விஜய் முதல் இபிஎஸ் வரை இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று…

5 hours ago