அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அதிமுக தலைமையிலான அரசு, 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு,அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது.அதில்,குடும்ப ஓய்வூதியம் கிடையாது உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
இதனையடுத்து,புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டம் நடத்தினர்.ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில்,அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்தலாமா?,என்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது.இந்தக் குழு வழங்கும் அறிவுறுத்தலின் படி,புதிய ஓய்வூதிய திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் ரத்து செய்வார் என்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது.
முன்னதாக,திமுக ஆட்சிக்கு வந்தால்,புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என,முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…