சமூக விரோதக் கும்பல்களை தமிழக அரசு காப்பாற்றுகிறதா? – மு.க.ஸ்டாலின் கேள்வி!

Published by
Surya

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் உயிரிழந்ததை தொடர்ந்து, சமூக விரோதக் கும்பல்களை தமிழக அரசு காப்பாற்றுகிறதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த மோசஸ் என்ற செய்தியாளர், சென்னை – குன்றத்தூர் ஆகிய பகுதிகளுக்கு அருகே நடைபெறும் சமூக விரோத செயல்களை (போதைப் பொருள் விற்பனை) வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார். இதனால் தொடர் மிரட்டலுக்கு உட்பட்டார். அவரின் தந்தை, காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையம் எடுக்காத நிலையில், நேற்று இரவு மோசஸை அலைபேசியில் அழைத்த மர்மநபர்கள், அவரை வீட்டை விட்டு வெளியே வருமாறு அழைத்தனர். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினார்கள். மோசஸின் அலறல்சத்தம் கேட்க, அவரின் தந்தை வெளியே வந்து பார்த்தார். வெட்டுக்காயங்களுடன் மோசஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

செய்தியாளர் படுகொலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், சட்ட விரோதச் செயல்களை வெளிக் கொண்டு வந்ததால் மிரட்டப்பட்ட செய்தியாளர் மோசஸ், காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இன்றி, நேற்று வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

சமூக விரோத கும்பல்களுக்கு, எடப்பாடி அ.தி.மு.க அரசும், அதன் காவல்துறையும் பாதுகாப்பளிப்பதும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருப்பதும், ஜனநாயகத்தின் மீது விழுகின்ற சம்மட்டி அடியாகும் என தெரிவித்தார்.

மேலும் அந்த அறிக்கையில், பத்திரிக்கை – ஊடங்களின் கருத்துரிமையின் கழுத்தில் “அரசு கேபிள்” என்ற கயிறு சுற்றப்பட்டு நெரிப்பதும், நெருக்கடி தருவதும் தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய அவர், செய்தியாளர் மோசஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும், பத்திரிகைச் சுதந்திரம் காப்பாற்றப்பட தி.மு.க என்றும் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…

37 minutes ago

‘அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டியதில் என்ன தவறு?’ – விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில்.!

பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…

49 minutes ago

சண்டைக் கலைஞர் உயிரிழப்பு: ”இனிமேல் இப்படி நடக்கவே கூடாது”- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…

1 hour ago

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…

2 hours ago

தொடர் போர் பதற்றம்.., உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் ராஜினாமா.!

உக்ரைன் : ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இன்று (ஜூலை 15) தனது…

2 hours ago

இங்கிலாந்து மன்னர் சார்லஸை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி.!

லண்டன் : கடைசி நாள் வரை நீடித்த லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை…

3 hours ago