TNCM MkStalin gov[Image-Twitter/@Sunnews]
ஆரியத்தை வீழ்த்தும் சக்தியாக திராவிடம் இருப்பதால் ஆளுநர் பயப்படுகிறார் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று தொடங்கி மூன்று நாட்கள் திமுக தலைமையில் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை குறித்து பேசினார்.
அப்போது பேசிய முதல்வர் திராவிடம் என்பது காலாவதியான கொள்கையல்ல, சனாதனத்தை காலாவதியாக்கியது திராவிட மாடல் தான் என ஆளுநரின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாககூறினார். முன்னதாக தமிழக ஆளுநர் ரவி, திராவிடம் என்பது காலாவதியான கொள்கை என்றும் இதனை உயிர்ப்புடன் வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.
இது குறித்து பேசிய முதல்வர், சனாதனம், வர்ணாசிரமம், மனுநீதி, சாதியின் பெயரால் இழிவு செய்யப்படுவது, பெண் என்பதால் புறக்கணிப்பது ஆகியவற்றை எல்லாம் இல்லாமல் காலாவதி ஆக்கச் செய்தது திராவிடம் தான் என ஆளுநருக்கு கூறிக்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் ஆரியத்தை வீழ்த்தும் சக்தி தான் திராவிடம், இதனால் தான் ஆளுநர் பயப்படுகிறார் என முதல்வர் ஸ்டாலின் இந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…
சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக…
டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…
சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…
பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…