வலுவிழந்தது தாழ்வு மண்டலம்.., ”இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்” – வானிலை அப்டேட்..!
தமிழகத்தில் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு -வடகிழக்கு திசையில் 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. தற்போது டாக்காவிற்கு 110 கி.மீ., மேற்கு -வடமேற்கு திசையில் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இன்றைய தினம், கோயம்புத்தூர். திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை, கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, தென்காசி, குமரியில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“வீரத்தின் அடையாளம் குங்குமம்”..பிரதமர் மோடி பேச்சு!
May 31, 2025