திலகபாமா நீக்ககிய ராமதாஸ்.., ‘பாமக பொருளாளராக தொடர்வார்’ – அன்புமணி அதிரடி அறிவிப்பு.!
திலகபாமாவை பொறுப்பிலிருந்து நீக்கி சற்று நேரத்துக்கு முன்பு ராமதாஸ் அறிக்கை வெளியிட்ட நிலையில், அன்புமணி புது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக பொருளாளர் பதவியிலிருந்து திலகபாமா நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். திலகபாமாவுக்கு பதிலாக சையத் மன்சூரை பொருளாளராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பில், பாமக தலைவர் என தனது பெயரை ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களிலே அன்புமணியும், தலைவர் என குறிப்பிட்டு புதிய அறிக்கையை வெளியிட்டார். அதில், பாமக பொதுக் குழுவால் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டவர் திலகபாமா, அவர் பொருளாளராக தொடர்வார், அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
*பொருளாளராக திலகபாமா தொடர்வார்*
*பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிவிப்பு.*
பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. திலகபாமா அவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள்… pic.twitter.com/4mfwX6icpz
— Sarath kshatriyas (@SarathKshatriya) May 30, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
“வீரத்தின் அடையாளம் குங்குமம்”..பிரதமர் மோடி பேச்சு!
May 31, 2025