நான்தான் பாமக தலைவர்.! ‘பாமக தனி நபரின் சொத்தும் கிடையாது’ – அன்புமணி திட்டவட்டம்.!
பாமக யார் சொத்தும் கிடையாது, நான் தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் என்று சென்னை சோழிங்கநல்லூரில் நடந்த கூட்டத்தில் அன்புமணி பேசியிருக்கிறார்.

சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும் ராமதாஸ் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், ராமதாஸின் கடுமையான விமர்சனங்களை அடுத்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை சோழிங்கநல்லூரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 மாவட்டச் செயலாளர்கள் வருகை தந்தனர்.
பாமக நிர்வாகிகளின் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி, ” பாமக என்பது நீங்கள்தான் (நிர்வாகிகள்), நீங்கள் இல்லையென்றால் கட்சி இல்லை. இக்கட்சி என் சொத்தோ, பாலு சொத்தோ அல்லது வேறு யாரின் சொத்தோ அல்ல. பாமக பொதுக்குழுவில் முறையாக நீங்கள்தான் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தீர்கள்.
என்னுடைய கடமை, உங்கள் எல்லோருடனும் சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனாக நான் செயல்படுவேன். பொறுப்புகள் வரும் போகும். ஆனால் நிரந்தரமானது உங்களின் அன்பும் பாசமும்தான். அது என்றுமே போகாது. சமூக நீதிப் போராளி மருத்துவர் அய்யாவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த களத்தில் வேகமாக இறங்குவோம்.
பா.ம.க. தொண்டர்களின் சொத்து தனிப்பட்ட நபரின் சொத்து அல்ல, பா.ம.க.வின் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் நான். நிர்வாகிகளை மாற்ற ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை, கட்சித் தலைவராகிய எனக்கே அதிகாரம் உள்ளது” என்று அதிரடியாக பேசியிருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“வீரத்தின் அடையாளம் குங்குமம்”..பிரதமர் மோடி பேச்சு!
May 31, 2025