ஜெ. இல்லத்தை கையகப்படுத்துவது தொடர்பான விசாரணையை கைவிட கோரி தீபக் தொடர்ந்த வழக்கு, தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவித்த வழக்குடன் சேர்த்து பட்டியலிட பரிந்துரை.
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா ஆகியோரை இரண்டாம் நிலை வாரிசுகளாக உயர்நீதிமன்றம் அறிவித்தது. ஜெயலலிதா சொத்துக்கள் மீது தீபா மற்றும் தீபக் உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வேதா இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்ற கூடாது எனவும், போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் முதல்வரின் அலுவலகமாக மாற்ற உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது.
ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும் என கடந்த 2017-ம் ஆண்டு முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெ. இல்லத்தை கையகப்படுத்துவது தொடர்பான விசாரணையை கைவிடக்கோரி தீபக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவித்த இந்த வழக்குடன் சேர்த்து பட்டியலிட சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும் அந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வுக்கு மாற்றவும் சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…