திருப்போரூரில் திமுக எம்.எல்.ஏ. துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கைது செய்யப்பட்டார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், திமுகவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. அதேபோல் திமுகவினரை பார்த்து மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கூறினார்.
இந்நிலையில், திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளிட்டு உள்ளார். அதில், ஊழல், ரவுடித்தனம், கொடநாடு சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்குவது, கொடநாட்டில் கொள்ளை, கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையானோர்களை காப்பாற்றுவது போன்றவற்றின் பிறப்பிடமாக இருக்கும் அதிமுக ஆட்சியில் இடம்பெற்ற அமைச்சர் ஜெயக்குமார் திமுகவை பார்த்து வன்முறை கட்சி என்று கூறுவது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்களின் உயிர் காக்கும் வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் செய்து கொள்ளையடித்து ஊழலில் ஊறிப் போயிருக்கும் ஜெயக்குமாருக்கு திமுகவைப் பற்றி விமர்சிக்க அடிப்படைத் தகுதி இல்லை, அருகதையும் இல்லை எனக் கூறினார். ரவுடிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள வானத்தை நோக்கி எம்.எல்.ஏ.வின் தந்தை சுட்டது திசை திருப்பப்பட்டுள்ளது. வானத்தை நோக்கி சுட்டதற்கு பொய் வழக்குப் பதிவு செய்து எம்.எல்.ஏ.வை கைது செய்யப்பட்டது திட்டமிட்ட சதி.
தாக்குதல் நடத்த வந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலத்தை அபகரிக்க நடைபெற்ற முயற்சி போல் அமைச்சர் பேசுவது உள்நோக்கத்தின் வெளிப்பாடு என கூறினார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…