ஜீவசமாதி சர்ச்சை : இருளப்பசாமி மகன் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

சில தினங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டத்தில் இருளப்பசாமி என்பவர் ஜீவசமாதி அடைவதாக கூறி அதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் செய்திருந்தனர். அவர் ஜீவசமாதி அடைய போவவதாக செய்தி சுற்று வட்டாரத்தில் பரவியத்தன் பேரில், வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனர். ஆனால், அன்றைய தினம் அவர் ஜீவசமாதி அடைவதில் இருந்து பின்வாங்கி விட்டார்.
இன்னும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இருக்கிறது. அது நிறைவேற்றிவிட்டு வேறு நாளில் ஜீவசமாதி அடைய போவதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்தனர். அப்போது அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை போலீசார் கைது செய்யவில்லை.
இந்நிலையில், தற்போது கைது செய்து அவரிடம் காவல்துறை விசாரிக்கையில், இந்த ஜீவசமாதி காண ஏற்பாடு அனைத்து ஏற்பாடுகளையும், தனது மகன் கண்ணாயிரம் தான் செய்தான் என அவர் ஒப்புக் கொண்டார். இந்த விசாரணையினை அடுத்து, கண்ணாயிரம் மற்றும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் மீது மக்களை ஏமாற்றுதல், அனுமத்தியின்றி உண்டியல்வைத்து வசூல் செய்தல் போன்ற குற்றங்கள் உட்பட சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு..,”தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர்”- விஜய் புகழாரம்.!
July 15, 2025
பூமிக்கு திரும்பிய பரபரப்பு நிமிடங்கள்.., திறந்தது விண்கலத்தின் கதவு.! புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா.!
July 15, 2025
பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!
July 15, 2025