#JustNow: ஆட்டோ கட்டணம் நிர்ணயம் – வரும் 13ம் தேதி ஆலோசனை!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது குறித்து வரும் 13ம் தேதி போக்குவரத்துறை ஆலோசனை.

தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மே 13ம் தேதி) நடைபெறும் என்று போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம் தொடர்பாக போக்குவரத்து ஆணையர் தலைமையில், ஆலோசனை நடைபெறும் என போக்குவரத்துறை இணை ஆணையர் அறிவித்துள்ளார்.

தொழிற்சங்கம், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவுடன் ஆலோசனை நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2013-ஆம் ஆண்டு ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அப்போது குறைந்தபட்ச கட்டணமாக 25 ரூபாய் வசூலிக்க வேண்டும். இதன்பின்னர் ஒவ்வொரு கிலோ  மீட்டருக்கும் 10 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், அதற்கு பின்னர் ஆட்டோ மீட்டர் கட்டணம் முறையாக பொதுமக்களிடம் வசூலிக்கவில்லை என புகார்கள் எழுந்திருந்தது. சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில், ஆட்டோ மீட்டர் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை ஏற்ப மாற்றியமைக்க நடவடிக்கைகள் ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தது.

முறையாக கட்டணம் நிர்ணயம் செய்து, முறையாக கட்டண வசூலிக்கப்படுகிறதா என்பதை குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், இதுதொடர்பான ஆலோசனை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

6 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

7 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago