தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து ஜோதிமணி எம்.பி ட்விட்.
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்க தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஜோதிமணி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது கோரிக்கையை ஏற்று கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு!
மாண்புமிகு. உயர் கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி அவர்களைச் சந்தித்து அரவக்குறிச்சி,மணப்பாறை, விராலிமலை சட்டமன்ற தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். பிறகு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடமும் இந்த வேண்டுகோளை முன்வைத்தேன். அந்த கோரிக்கையை ஏற்று மணப்பாறை, அரவக்குறிச்சி தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பொன்முடி அவர்களுக்கும் அரவக்குறிச்சி, மணப்பாறை தொகுதி மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.’ என பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…