தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களுக்கான இந்த இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் தொடங்கியது. இதில் 158 ஒன்றியத்திற்கும் ஊராட்சி மன்ற உறுப்பினர் , ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறும் வகையில் தமிழக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தில் தனது வாக்கினை காலையிலேயே பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘ தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு தான் அறிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக நினைத்திருந்தால் அவர்கள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் ஏதேனும் ஒன்றை அறிவித்து விடலாம். ஆனால், நிர்வாகத்தில் சிறப்பான பங்கை ஆற்றியதனால் தான் தமிழகத்திற்கு முதல் இடம் கிடைத்தது.
சீன அதிபரும், பிரதமர் மோடியும் தமிழகத்தில் சந்தித்து கொண்டது உலக வரலாறு. சீன அதிபர் கூட தமிழக நிர்வாகத்தை பாராட்டிதான் சென்றார். அப்போதெல்லாம் முக.ஸ்டாலின் வெளிநாடு சென்றாரா ?’ என பேட்டியில் தெரிவித்திருந்தார்.
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…