“கலைஞரின் நிழல்;என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டி” – எம்பி கனிமொழி வாழ்த்து..!

Published by
Edison

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலைஞரின் நிழலாக தொடர்ந்தவர்,என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டி என்று எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு முதலில் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,”தலைவர் கலைஞர்,பேராசிரியர் அன்பழகன் இடத்தில் துரைமுருகன் உள்ளார்.அவர் பொன்விழா நாயகன்.கலைஞரின் அருகில் அல்ல,அவரது இதயத்திலே ஆசனம் போட்டு அமர்ந்து இருந்தவர் அமைச்சர் துரைமுருகன்.அத்தகைய இடம் எல்லாருக்கும் கிடைக்காது.அவர் எந்த துறைகளை கொடுத்தாலும் முத்திரை பதிப்பார்”,என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், “2001-ம் ஆண்டில் இருந்து அமைச்சர் துரைமுருகன் அவர்களது அவை நடவடிக்கைகளை நான் கவனித்து வருகிறேன். உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர் அவர்.கருணாநிதியின் அளவில்லாப் பாசத்தையும் அன்பையும் பெற்றவர். அவர் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்”,என்று கூறினார்.

இந்நிலையில்,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலைஞரின் நிழலாக தொடர்ந்தவர்,என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டி என்று எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“தன் இளமைக் காலத்திலிருந்தே தலைவர் கலைஞர் அவர்களின் நிழலாகத் தொடர்ந்தவரும், தன் பேச்சால் மக்களைக் கவர்ந்தவருமான, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்களுக்கு இன்று சட்டமன்றப் பொன்விழா நாள். தமிழக முதலமைச்சர் தளபதி அவர்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர் அவர்.

என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டியாய் திகழ்கின்றவர். கழகத்தின் முன்னேற்றத்திற்கும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் எப்போதும் துணையாக நிற்கும் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

1 hour ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

1 hour ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

2 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

3 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

4 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

4 hours ago