கள்ளக்காதலன், தம்பியுடன் சேர்ந்து மகளை கொன்ற தாய்..!

Published by
பால முருகன்

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் கள்ளக்காதலன்,தம்பியுடன் சேர்ந்து மகளை கொன்ற சோகமான சம்பவம்.

திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் காசர் இவருடைய மனைவி சகாயராணி இவர்களுடைய மகள் எஸ்தர் பேபி 39 வயதான இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர் பிறகு தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனது தாயார் சகாயராணி வீட்டிற்கு எஸ்தர் பேபி வந்துவிட்டார்.

இந்த நிலையில் சகாயராணிக்கும் அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது அந்த கள்ளத்தொடர்பு அவருடைய மகள் எஸ்தர் பேபி தெரியவந்ததும் இதையடுத்து தனது தாயை எஸ்தர் பேபி கண்டித்தார் ஆனால் சகாயராணி தனது கள்ளத்தொடர்பை பழக்கத்தை விடவில்லை,

இந்த நிலையில் எஸ்தர் பேபி கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் காணவில்லை பல இடங்களில் தேடியும் எஸ்தர் பேபி கிடைக்கவில்லை. இதனையடுத்து தனது மகளைக் காணவில்லை என்று கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர், இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து எஸ்தர் பேபி தேடிவந்தனர் ஆனாலும் அவரைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

மேலும் சகாயராணியின் தம்பி சேவியர் அருண் என்பவர் கொலை வழக்கு ஒன்றில் பள்ளிக்கரணை போலீசார் கைது செய்தனர் , அங்கு அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அங்கு விசாரித்தபோது எஸ்தர் பேபி தந்தை அப்துல் காதர் பள்ளிக்கரணை காவல்நிலையத் திற்கு சென்று அருண் சேவியர் சென்னை வந்த பிறகுதான் தன் மகளைக் காணாமல் போனதாகவும் அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து மேலும் போலீசார் சேவியர் அருணை விசாரித்தனர் விசாரணையின்போது சேவியர் அருண் மற்றும் சகாயராணி, பாக்யராஜ் ஆகிய மூவரும் சேர்ந்து எஸ்தர் பேபியை கத்தியால் குத்தி கொலை செய்து அவர் குடியிருந்த வீட்டுக்குள்ளேயே புதைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் போலீசாரிடம் சேவியர் அருணை ஸ்தர்பேபியை கொன்று புதைத்த இடத்தை காண்பிக்குமாறு கூறினர். இதையடுத்து எஸ்தர்பேபி புதைக்கப்பட்ட இடத்தை அவர் காட்டினர். மேலும் எஸ்தர் பேபி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி அவருடைய உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய தாமதமானது.

இந்த நிலையில் நேற்று போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் முன்னிலையில் எஸ்தர் பேபி புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டது, கொலை செய்யப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவருடைய எலும்புகள் மட்டுமே கிடைத்தன. அதை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

8 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

8 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

9 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

9 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

10 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

11 hours ago