[file image]
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் லஞ்சம் கொடுத்த புகாரில் சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகளை பெற லஞ்சம் கொடுத்ததாக சசிகலா, இளவரசி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது சொகுசு வசதிகளுக்காக சசிகலா மற்றும் இளவரசி லஞ்சம் கொடுத்ததாக வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நடைபெறும் கர்நாடகா லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால் சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடி வாரண்ட் பிறபித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சசிகலா, இளவரசி இருவரையும் கைது செய்து அக்.5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பெங்களூரு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும், இருவருக்காகவும் ஜாமின் கையெழுத்திட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு அக்.5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…