சென்னை:ஒரு ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
சென்னையை தளமாகக் கொண்ட சாஃப்ட்வேர் நிறுவனமான கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ்,தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஐந்து நிர்வாகிகளுக்கு தலா சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 5 புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.
10-வது ஆண்டு கொண்டாட்டம்:
மென்பொருள் சேவை நிறுவனம் தனது முதன்மையான ‘நோ-கோட்'( No-code work management) பணி மேலாண்மை தயாரிப்பை அறிமுகப்படுத்திய 10-வது ஆண்டை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடியது.அப்போது நிறுவனத்தின் ஆரம்ப காலத்திலிருந்து பணியாற்றி வரும் தலைமைப் பொறுப்பிலுள்ள ஐந்து நிர்வாகிகளான:தினேஷ் வரதராஜன்-தலைமை தயாரிப்பு அதிகாரி;கௌசிக்ராம் கிருஷ்ணசாயி-தயாரிப்பு மேலாண்மை இயக்குனர்;இன்ஜினியரிங் இயக்குனர் விவேக்,பொறியியல் துறை இயக்குநர் ஆதி ராமநாதன் மற்றும் துணைத் தலைவர் பிரசன்னா ராஜேந்திரன் ஆகியோரை கவுரவிக்கும் வகையில் 5 புதிய பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கியுள்ளது.
மிகச் சிறிய பாராட்டுதான்:
இது தொடர்பாக,அந்நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் கூறுகையில்:
“சொகுசு காரை விட சிறந்த பரிசை நான் நினைக்க முடியவில்லை. என்னுடன் ஆரம்ப காலத்தில் இருந்து தங்கியவர்கள்,அவர்கள் இல்லாமல் கிஸ்ஃப்ளோ இன்று இருந்திருக்காது.இது மிகச் சிறிய பாராட்டுதான்” என்றார்.
160 நாடுகளில் வாடிக்கையாளர்கள்:
மேலும்,வெளிநாடுகளில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் துபாயில் அலுவலகங்களை அமைப்பதற்கும் நிறுவனம் கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர்கள் செலவழிக்க திட்டமிட்டுள்ளதாகவும்,நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 160 நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றும் சுரேஷ் கூறினார்.ஒரு ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…