கோயம்புத்தூர் இடையார்பட்டி ஊரில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் பெயிண்ட்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஷாலினி என்ற பெண்ணை காதலித்து சென்றாண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்க்கு பின்னர் ராஜேந்திரன் சரிவர வேலைக்கு போகவில்லை என தெரிகிறது.
ஷாலினி கர்ப்பமாக இருந்துள்ளார். ராஜேந்திரனுக்கும் ஷாலினிக்கும் பிரச்சனை வர ஷாலினி தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து ராஜேந்திரன் ஷாலினியை அழைத்து வர அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஷாலினி அம்மாவான மீனாவிற்கும், ராஜேந்திரனுக்கும் சண்டை வர அப்போது ராஜேந்திரன் தனது மாமியார் மீனாவை தாக்கியதாக கூர்பாடுகிறது.
இதனை அறிந்து கோபமடைந்த ஷாலினியின் தந்தை தங்கமணி குமார், தனது மருமகன் ராஜேந்திரனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த காட்சி அருகில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியது. இந்த சம்பவத்தை அடுத்து, ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜேந்திரனை கோவை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
மேலும், ஷாலினிக்கு மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த கொலை சம்பந்தமாக போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ராஜேந்திரனை கொலை செய்த தங்கமணி குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…