தமிழகத்தில் 9 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடிக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள்.! – எல்.முருகன்

Published by
மணிகண்டன்

ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை மத்திய அரசு விரிவுபடுத்தி உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட திருச்சி விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, திருச்சி காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை!

திருச்சி விமான நிலையம் திறந்து வைக்கபட்ட பின்னர் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், உலகளவில் இந்தியாவை 2047க்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து வருகிறார் பிரதமர் மோடி என்று குறிப்பிட்டார் .

மேலும் , பிரதமர் ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 11 லட்சம் கோடி ரூபாயிலான நலதிட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இன்று மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. ஒரு ஆண்டில் மட்டும் 11 மருத்துவக்கல்லூரிகளை  மத்திய அரசு தமிழகத்திற்கு தந்துள்ளது.

தமிழக ரயில்வே துறைக்கு 6000 கோடி ரூபாய் மத்திய அரசு கொடுத்துள்ளது. காசி தமிழ்ச்சங்கத்தை கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக பிரதமர் மோடி நடத்தியுள்ளார். நேற்று முன்தினம் வரையில் காசி தமிழ்ச்சங்கத்தை நிறைவு செய்துவிட்டு இங்கே வந்துள்ளார் பிரதமர் மோடி. காசிக்கும், தென்காசிக்கும் உள்ள தொடர்பு, காசிக்கும் சிவகாசிக்கும் உள்ள தொடர்பு என தமிழகத்திற்கும் காசிக்குமான தொடர்பை வலுப்படுத்தியவர். தமிழ் மொழியை , திருக்குறளை உலக அரங்கில் முன்னெடுத்து சென்றவர் பிரதமர் மோடி என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்றைய விழாவில் பேசினார்.

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

9 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

9 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

10 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

10 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

14 hours ago