வெள்ளி திரையை பகுத்தறிவு சிந்தனைக்கு லாவகமாக பயன்படுத்திய முன்னுதாரண கலைஞர் விவேக் – இரா.முத்தரசன்!

Published by
Rebekal

நடிகர் விவேக் பகுத்தறிவு சிந்தனைக்கு வெள்ளித்திரையில் லாவகமாக பயன்படுத்திய முன்னுதாரணம் கலைஞர் என நடிகர் விவேக் அவர்களின் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் புகழாரம் கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெஞ்சுவலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நடிகர் விவேக் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் இவரது மறைவிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வெள்ளித்திரையில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படக்கூடிய நடிகர் விவேக் எனும் விவேகானந்தன் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். 34 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்களால் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அற்புதமான நகைச்சுவை கலைஞர் தான் விவேக் எனவும், மூடநம்பிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனைக்காக லாவகமாக வெள்ளித்திரை பயன்படுத்திய முன்னுதாரண கலைஞர் விவேக் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த விவேக் மத்திய மாநில அரசுகளின் கலை இலக்கிய விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் எனவும், இவர் சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்கி கவுரவ முனைவர் பட்டமும், நாட்டின் மதிப்பு மிக்க பத்மஸ்ரீ விருதும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளார். மேலும் தலைவர் அப்துல் கலாமின் கருத்துக்களை குழந்தைகளுடன் தொடர்ந்து எடுத்துச் சென்ற விவேக் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு எனவும் இரங்கல் தெரிவித்துள்ள அவர், விவேக்கின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அவரை பிரிந்து வாடும் அவரது மனைவி அருள்செல்வி மற்றும் குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

15 minutes ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

50 minutes ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

1 hour ago

“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை :  மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

2 hours ago

“போரை தொடங்கிடீங்க..ஆனா நாங்க தான் முடிப்போம்”…அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…

2 hours ago

ஸ்ரீ காந்த் விவகாரம் : “40 முறை போதைப்பொருள் விற்றேன்”..பிரதீப் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago